வலைப்பூக்களின் வலிமை
சும்மா இருக்காமல் இணையத்தின் வலைக்குள் வலம் வந்த போது கண்ணில் பட்ட கட்டுரையின் ஒரு பகுதி தந்த சிந்தனையின் விளைவு இது . பரந்த உலகத்தைச் சுருக்கிப் பக்கங்களுக்குள் நிரப்பும் வித்தையைச் செய்து கொண்டிருப்பவை வலைத்தளங்கள் . எல்லாப் பொருளும் இதன் பால் உள இதன் பால் இல்லாப் பொருளும் இல்லையே என்பது வலைப்பூக்களுக்கே பொருந்தும் .
"எப்போதோ ஆரம்பித்த வலைப்பூவைக் கண்டுகொள்ளாது விட்டு விட்டுப் பின் திடீரென்று வந்த ஞானோதயத்தில் அதைத் திறந்து பார்த்தால் அதில் வந்திருந்த பாராட்டுகள் .. என் மறதிக்கு ஒரு குட்டு வைத்தன . அதை விட அதிர்ச்சி அந்த வலைப்பூவில் வந்த சில செய்திகளைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பிய ஒரு அன்பர் மின்னஞ்சல் மூலம் என்னைத் தொடர்பு கொண்டது" என்றிருந்த அந்த வரிகள் வலைப்பூக்களின் வலிமையை உணர்த்தின .
கண்ணுக்குத் தெரியாத அன்பர்களின் குட்டுக ளும் கை குலுக்கல்களும் வலைப்பூக்களை வளர்க்கின்றன . யாரோ எழுதியதை படித்தது மாறி, என் எழுத்தை நானே வெளியிடுவது மகிழ்ச்சியைத் தருகிறது. பயனுள்ள தகவல்கள் பகிரப்படுவதால் எத்தனையோ முகம் தெரியாத மனிதர்களின் அலைச்சல்கள் குறைகின்றன. தொட்டால் தகவல் என்பது இதன் வரம் என்றால் தகவல் உண்மையா என்பது இதன் சாபம். பல நேரங்களில் பாதை மாறிப் போகும் அபாயமும் உண்டு. கலை ரசனை மிக்கவர்களுக்கு வலைப்பூக்கள் வரப்பிரச்சாதம் தான்.. தேடினேன் வந்தது என்பதற்கு உதாரணமாகக் கிடைத்த அழகிய மலர்கள் உங்களுக்காக.
![]() |
| கொக்கு ஆர்கிட் |
![]() |
| மனித ஆர்கிட் |
மீன் கொத்தி ஆர்கிட்



